சேதமாகி 2 ஆண்டாகியும் சீரமைக்கவில்லை கொத்தமங்கலம் ரேஷன் கடையில் வெளியில் நின்று ெபாருள் வாங்கும் அவலம்
10/29/2020 3:07:56 AM
திருத்துறைப்பூண்டி, அக்.29: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொத்தமங்கலாம் ஊராட்சியில்2 பொதுவிநியோக அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளது என்பதாலும் , மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் அதிகமானது என்பதாலும் கடியாச்சேரி மற்றும் ராஜகொத்தமங்கலம் ஆகிய இரண்டு இடங்களில் இரண்டு பொதுவிநியோக அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே திருத்துறைப்பூண்டி - மன்னர்குடி நெடுஞ்சாலை அருகே செயல்படும் அங்காடியின் கட்டிடம் பழமையானது. போதுமான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. மேலும் கஜா புயலின்போது அங்காடியின் முன்புறம் பொதுமக்களுக்காக நிழலுக்காக போடப்பட்டிருந்த பந்தலும் முன்புற கேட்டும் சேதமடைந்தது.
2 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை அங்காடி சீர்செய்யப்படாமல் அப்படியே உள்ளது. பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலிலும் மழையிலும் நின்றே பொருட்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் இந்த அங்காடி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே செயல்படுவதால் . எஞ்சிய நாட்களில் மூடப்பட்டே இருக்கும். அப்படி மூடப்பட்ட அங்காடியின் முன் புறம் தற்போது கேட் இல்லாததால் உட்புறம் ஆடுகளும் மாடுகளும் சென்று படுப்பதுடன் , அங்கே அதன் கழிவுகளையும் போட்டு விடுகின்றன. இதனால் அடுத்த நாள் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அந்த கழிவுகளை மிதித்தபடியே தான் உள்ளே சென்றுவர வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து சோழன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் வட்ட வழங்கு அலுவலகம் , வட்டார வளர்ச்சி அலுவலகம், மன்னார்குடி கோட்டாட்சியர் ஆகியோரிடத்தில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கை இல்லை.இது குறித்துசமூக ஆர்வலர் சிவகுமார் கூறுகையில், அங்காடியின் எதிரே ஒரு பந்தல் அமைத்துக்கொடுத்தால் பொதுமக்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும் . பந்தல் அமைத்து தர அரசு உடனடியாக முன்வரவில்லை என்றாலும் பொதுமக்கள் ஒன்றிணைந்தோ அல்லது சமூக நல அமைப்புக்கள் மூலமாகவோ ஒரு தற்காலிக கீற்று பந்தல் அமைக்க அரசு அனுமதி தரவேண்டும் என்றார். பொதுமக்கள் கூறுகையில்: இந்த அங்காடி அருகில் அரசு அலுவலகங்கள் இருப்பதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே இந்த இடத்தில் ஒரு வேகத்தடை அமைத்துதர வேண்டும் என்றனர்.
மேலும் செய்திகள்
வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி திருத்துறைப்பூண்டியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காவல்துறையில் மிகை நேரப் பணிகளுக்கு மதிப்பூதியம் 200 ல் இருந்து 500 ஆக உயர்த்தியது போல் எங்களுக்கும் வழங்கவேண்டும்
சிறைத்துறையினர் கோரிக்கை வலங்கைமான் அருகே விருப்பாச்சிபுரத்தில் குழந்தை கொத்தடிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும்100% இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி பெருகவாழ்ந்தானில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் டெல்டா மாவட்டங்களில் தொடர்மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் குளறுபடி
விவசாயிகள் குற்றச்சாட்டு 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு காவல் ஆய்வாளருக்கு எஸ்பி பாராட்டு பொதக்குடியில் மக்கள் கிராமசபை கூட்டம்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்