குளத்தூர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு
10/28/2020 7:21:49 AM
குளத்தூர்,அக்.28: குளத்தூர் துர்க்கையம்மன் கோயில் நவராத்திரி நிகழ்ச்சி நிறைவாக சூரசம்ஹாரம் நடந்தது.குளத்தூர் தெற்குதெருவீதியில் உள்ள துர்க்கையம்மன் கோயில் நவராத்திரி விழா கடந்த 17ம்தேதி துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்களும் கோயில் வளாகத்தில் கொலு பொம்மைகளை வைத்து மாலை சிறப்பு பூஜை நடந்தது. நவரத்திரி பத்தாம் நாள் நிறைவாக பெண்கள் பஜனைபாடி விளக்கு பூஜை நடத்தினர். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியாக சூரனை முக்கியவீதியில் ஊர்வலமாக இழுத்து சென்று கோயில் முன்பு இருந்த துர்க்கையம்மன், சூரனை வதைக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு பலவித அபிஷேகம் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கபட்ட தேரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
மேலும் செய்திகள்
தொடர் மழை காரணமாக ஆறுமுகநேரி பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது விவசாயிகள் கவலை
கோவில்பட்டியில் சமத்துவ பொங்கல் விழா அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு
வைகுண்டம் அருகே கல்குவாரியில் வாலிபர் மர்ம சாவு
பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
சிறந்த சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவிடம் உடன்குடி யூனியன் சேர்மன் வாழ்த்து
மெர்க்கன்டைல் வங்கி சார்பில் தூத்துக்குடியில் பொங்கல் விழா
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்