ரூ.13,780 பறிமுதல் விவகாரம் சார் பதிவாளர் மீது வழக்கு
10/28/2020 4:14:33 AM
சென்னை: பம்மல் சார் பதிவாளர் அலுவகத்தில் கணக்கில் வராத ரூ.13,780 பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சார் பதிவாளர் தினேஷ் உட்பட 12 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடந்த 17ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.13,780 சிக்கியது.
இதுகுறித்து அங்கு பணிபுரியும் சார் பதிவாளர் தினேஷ் (45), உதவியாளர்கள் ஜாபர், வரபிரசாத் (33), ரஞ்சித் (30), ராமமூர்த்தி, டேடா என்ட்ரி ஆப்ரேட்டர் உமா மகேஸ்வரி, முருகன் உள்ளிட்ட 12 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. கைப்பற்றப்பட்டது லஞ்சம் பணம் என தெரியவந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சார் பதிவாளர் தினேஷ் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழகம் வெற்றிநடை போடவில்லை வெட்கி தலைகுனிந்து நடைபோடுகிறது: கனிமொழி எம்பி ஆவேசம்
சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி திரைப்பட இயக்குநர் ₹9.5 லட்சம் மோசடி: வாலிபர் புகார்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீர் தர்ணா
சீல் வைக்கப்பட்ட வீட்டினுள் உணவின்றி தவிக்கும் நாய்கள்: அயனாவரத்தில் பரிதாபம்
பெண் கொலை வழக்கில் 3 பேர் கைது 80 சவரனை கொள்ளையடித்த போது கூச்சலிட்டதால் வெட்டி கொன்றோம்: பரபரப்பு வாக்குமூலம்
விடுமுறை நாளில் சுற்றுலா வந்தபோது செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்தை, மகன், மகள் பரிதாப பலி
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்