ஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க வியாபாரிகள், தொழிலாளிகள் முடிவு பாதுகாப்பு இல்லை: தினமும் திருட்டு
10/28/2020 4:10:50 AM
காந்திமார்க்கெட் கடந்த 7 மாதங்களாக பூட்டியே கிடக்கிது. கொரோனா பொதுமுடக்கத்தை தொடர்ந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை திறக்கப்பட்ட பின்னும் காந்தி மார்க்கெட் திறக்கப்படாமல் உள்ளது. மூடியே கிடக்கும் இந்த மார்க்கெட்டில் கடைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. நாள்தோறும் ஏதாவது ஒரு கடையை உடைத்து பொருட்களையும், பணத்தையும் திருடிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. உரிய பாதுகாப்பு இல்லை. கடைகள் பூட்டியிருந்தாலும் கடை வாடகையை மாநகராட்சிக்கு வியாபாரிகள் செலுத்தி வருகின்றனர். பாலக்கரையை சேர்ந்தவர் காஜாமொய்தீன் (67). இவர் கடந்த 50 ஆண்டுகளாக காந்தி மார்க்கெட்டில் பிரியாணி அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையை கடந்த 2 நாட்களுக்கு முன் உடைத்து, கடையிலிருந்த மூட்டை தைக்கும் இயந்திரம், தராசு மற்றும் கல்லாவிலிருந்த பணத்தை (மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்பு) திருடிச் சென்றுள்ளனர். செலவாகும் என்பதால் அவர் போலீசுக்கும் செல்லவில்லை. கொரோனா பொது முடக்கத்தால் ஏற்கனவே முடங்கி போயிருக்கும் வியாபாரிகளுக்கு இதுமேலும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
காந்திமார்க்கெட் இருக்கும் இடத்தில் ரூ.170 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அடுக்குமாடி கட்டிடத்துடன் கடைகள் அமைய தி்ட்டமிடப்பட்டுள்ளது. மார்க்கெட் வியாபாரிகளை அப்புறப்படுத்தி கடைகள் கட்டினால், கட்டுமானத்தில் ஒரு பெரும் தொகை கமிஷனாக அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் கைமாறும். தவிர, புதிய கடைகள் ஏலம் விடுவதன் மூலம் ஒரு கமிஷன் கிடைக்கும். தற்போது இருப்பதை காட்டிலும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இதனால்தான் இத்தனை ஆண்டுகளாக மார்க்கெட்டே கதி என்று கிடக்கும் வியாபாரிகளையும் அவர்களது குடும்பங்களையும் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் துரத்தியடிக்க அரசும், அரசியல்வாதிகளும் துடிப்பதாக வியாபாரிகள் வேதனை பொங்க தெரிவிக்கின்றனர். எங்கள் வேதனை அனைத்தும் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.
மேலும் செய்திகள்
ரயில் நிலையத்தில் நீண்ட வரிசை சங்கிலியாண்டபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாததால் பொதுமக்கள் மறியல்
திருச்சி பகுதியில் கஞ்சா விற்ற ரவுடி உட்பட 5 பேர் கைது
ஒன்றரை கிலோ பறிமுதல் கண்ணக்குடியில் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி
தடுத்து நிறுத்திய போலீஸ் லால்குடி அருகே நகர் ஊராட்சியில் ரூ.14 லட்சத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் திறப்பு
மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் பெற்றுத்தர எம்எல்ஏவிடம் விவசாயிகள் கோரிக்கை
கீரனூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் அத்யாவசிய பணிக்காக 4 கி.மீ., சுற்றி செல்லும் மக்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்