மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரியின் வங்கி பண பரிவர்த்தனை விசாரணை போலீசார் தகவல் வேலூரில் விஜிலென்ஸ்சில் சிக்கிய
10/22/2020 7:26:35 AM
வேலூர், அக்.22: வேலூரில் விஜிலென்ஸ்சில் சிக்கிய முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது கும்பத்தினரின் பெயரில் உள்ள 10 வங்கி கணக்குகளில் இதுவரை நடந்த பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். வேலூர் மண்டல மாசு கட்டுப்பாடு வாரிய இணை முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வம். காட்பாடி, ராணிப்பேட்டை வீட்டுகளில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது ₹3.25 ேகாடி பணம், 3.5 கிலோ தங்க நகை, 6.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 90 சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு பாஸ் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
முதற்கட்டமாக பன்னீர்செல்வத்தின் மனைவி பத்மாவின் பெயரில் வங்கி கணக்கு மற்றும் லாக்கர் முடக்கப்பட்டது. கைப்பற்றிய 90 சொத்து ஆவணங்களில் 65 ஆவணங்கள் அசையா சொத்து என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள 12 வங்கி கணக்குகள் மற்றும் ஒரு லாக்கர் ஆகியவற்றை விஜிலென்ஸ் போலீசார் முடக்கி உள்ளனர். இதுகுறித்து விஜிலென்ஸ் போலீசார் கூறியதாவது: பன்னீர்செல்வம் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் உள்ள 12 வங்கி கணக்குகளில் தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை நடந்துள்ள பண பரிவர்த்தனை தொடர்பான அறிக்கையை அந்தந்த வங்கி அதிகாரிகளிடம் கேட்டு உள்ளோம்.
ஓரிரு நாட்களில் அறிக்கை கிடைத்தும், அந்த வங்கி கணக்கில் இருந்தும் பணம் பரிவர்த்தனை நடந்த நபர்களிடம், என்ன காரணத்திற்காக பணம் பரிவர்த்தனை நடந்தது என்று அவர்களிடம் விசாரணையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு பணம் வாங்கி கொடுத்து உதவிய நபர்கள் யார்?, புரோக்கராக செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்தும் ரகசிய விசாரணை நடத்தப்படுகிறது’ என்றனர்.
மேலும் செய்திகள்
மாடு விடும் விழாவில் போலீஸ் தடியடி 3 இடங்களில் காளைகள் முட்டி 48 பேர் படுகாயம் காட்பாடி அருகே பரபரப்பு
கலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்தார் ₹2.49 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வேலூரில் குடியரசு தின விழா
அரசு அலுவலகங்கள் தற்காலிக இடமாற்றம் குடியாத்தத்தில்
150 இளம் வாக்காளர்கள், 18 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு சிறப்பு முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார் வேலூர் மாவட்டத்தில்
பொன்னையிலும் பறவைக்காய்ச்சல் பீதி பறவைகள் செத்து மடிவதால் பரபரப்பு ஆற்காட்டை தொடர்ந்து
குடியரசு தின கிராம சபா கூட்டம் ரத்து கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!