புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்
10/22/2020 3:26:16 AM
திருப்பூர், அக்.22: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருப்பூரில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் தலைமை வகித்தார். ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி சோழன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் யாழ் ஆறுச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கொரோனா ஊரடங்கு காலத்திலும் மத்திய அரசு மக்கள் விரோத கொள்கைகளில் ஈடுபட்டு வருகிறது. நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு கொண்டுள்ளது. மத்திய அரசின் தமிழர் விரோத போக்குக்கு மாநில அரசும் துணை போகிறது. இதைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும் செய்திகள்
அரசு மருத்துவக்ககல்லூரி மருத்துவமனையில் முன்களப்பணியார்கள் 61 பேருக்கு தடுப்பூசி
அவிநாசியில் இருந்து கோவில்வழிக்கு மீண்டும் பஸ் இயக்கம்
தாழ்வான சாலையில் தேங்கும் மழைநீர்
மதுபோதையில் ஏ.டி.எம் இயந்திரத்தை சேதப்படுத்தியவர் கைது
கொட்டும் பனியால் பொதுமக்கள் கடும் அவதி
திருப்பூரில் 15 பேருக்கு கொரோனா
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்