மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி கடைசி நாள் செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில்
10/21/2020 7:15:33 AM
செய்யாறு, அக்.21: செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், முதலாமாண்டு பாடப்பிரிவுகளில் காலியிடங்களுக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ்.ஆல்பிரட்சேவியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு (2020-21) அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னியல் மற்றும் தொடர்பியல், கணினியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசமாகவும், பிற மாணவர்கள் ₹150 கட்டணம் செலுத்தியும் விண்ணப்பங்களை கல்லூரியில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 27ம் தேதி மாலை 4 மணிக்குள் வந்து சேர வேண்டும். 3ம் கட்ட மாணவர்கள் கலந்தாய்வு வரும் 28ம் தேதி காலை 9 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். மேலும், விவரங்களுக்கு 04182- 224275 என்ற தொலைபேசி எண்ணில் வேலை நாட்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
காவல் நிலையத்தில் டிஎஸ்பி விசாரணை சேத்துப்பட்டு மக்கள் மகிழ்ச்சி கடத்தல் மணலை போலீஸ் விற்ற புகார்
பைக்குகள் மோதி பெயின்டர் பலி 3 பேர் படுகாயம் கீழ்பென்னாத்தூரில்
ஏரி மண் கடத்தியவர் கைது
கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி திருவண்ணாமலையில் நடந்தது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு சொத்து பிரச்னைக்கு தீர்வு கேட்டு பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபர் போலீசில் சோதனையில் சிக்கினார்
தண்டராம்பட்டு அருகே முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் குண்டாசில் கைது
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்