வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பி நர்சுக்கு டார்ச்சர் 2 வாலிபர்களிடம் விசாரணை
10/21/2020 7:14:00 AM
குடியாத்தம், அக். 21: குடியாத்தம் அருகே தனியார் மருத்துவமனை நர்ஸ் செல்போனுக்கு ஆபாச படங்கள், எஸ்எம்எஸ் அனுப்பி டார்ச்சர் செய்ததாக 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரமாக இவரது செல்போனின் வாட்ஸ் அப் எண்ணுக்கு பல்வேறு எண்களில் இருந்து ஆபாசமான புகைப்படங்கள், ஆபாச எஸ்எம்எஸ்கள் வந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த இளம்பெண், ஆபாச படம் அனுப்பிய மர்ம நபருக்கு போன் செய்து எச்சரித்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஆபாச படங்கள், எஸ்எம்எஸ்கள் வந்து கொண்டே இருந்தது. இதனால் மனவேதனை அடைந்தவர் குடியாத்தம் தாலுகா போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, சைபர் கிரைம் பிரிவுக்கு ஆபாச படம் அனுப்பியவர்களின் செல்போன் எண்களை அனுப்பி விசாரித்தனர். இதில், குடியாத்தம் அடுத்த பி.கே.புரத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பல்வேறு எண்களில் இருந்து ஆபாச படம் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து 2 வாலிபர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் 12.64 லட்சம் பேர்: ஆண்களை விட பெண்களே அதிகம்
வேலூர் 1வது மண்டலத்தில் தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வீணாகும் அவலம்: அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை
தென்னையை பாதிக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்
கால்நடை வளர்ப்போருக்கு தீவனப்பயிர் விதைகள் கால்நடை மற்றும் வேளாண்துறை வினியோகம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில்
கூடுதலாக 3 இடங்களில் மினி கிளினிக் வேலூர் மாநகராட்சியில்
வாடகை, வரி செலுத்தாத 1,000 பேருக்கு நோட்டீஸ் சீல் வைப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை வேலூர் மாநகராட்சியில்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!