வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
10/21/2020 3:03:57 AM
திருப்பூர், அக்.21: கொரோனா தொற்றில் உயிரிழந்த வருவாய் துறை அலுவலர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கலெக்டர் அலுவலக சங்க நிர்வாகி மோகனன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் முருகதாஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். வருவாய்த்துறையின் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உடனடியாக நிவாரணம், குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், இரவு காவலர், ஓட்டுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றோர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உடனடியாக சரி செய்து, 11 நாட்கள் போராட்ட காலத்தை பணிக்காலமாக வரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ.5ம் தேதி வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தவும், நவம்பர் 25, 26ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு பறக்கும்படை குழு நியமனம்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கவன ஈர்ப்பு கூட்டம்
காங்கயம் மாடுகள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை
ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி உடுமலையில் கிரிக்கெட் போட்டி
திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்