பழநி கோயில் செயல்அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி பொறுப்பேற்பு
10/20/2020 4:42:02 AM
பழநி, அக். 20: தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு சாதாரண நாட்களிலேயே சராசரியாக 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்வர். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்வர். இக்கோயிலின் நிர்வாகத்திற்கு ஐஏஎஸ் தரத்திலான அதிகாரிகள் நியமிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனடிப்படையில் பழநி கோயில் செயல் அலுவலராக ஜெயசந்தரபானு ரெட்டி என்ற அதிகாரி ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டார்.
பின், கிருஷ்ணகிரி கலெக்டராக மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக இருந்த நடராஜன் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது ஈரோடு வணிக வரிகள் துறை இணை ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியான கிராந்திகுமார் பதி பழநி கோயில் செயல்அலுலவலராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று தனது பொறுப்புகளை ஏற்று கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம், பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமென தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
தொப்பம்பட்டி திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
பட்டிவீரன்பட்டி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ஒட்டன்சத்திரத்தில் கிரிக்கெட் போட்டி அர.சக்கரபாணி எம்எல்ஏ துவக்கி வைத்தார்
நாங்காஞ்சியாறு முழு கொள்ளளவை எட்டியது மலர்தூவி வரவேற்பு
சின்னாளபட்டியில் வீட்டு கூரையில் இருந்த 2 உடும்புகள் மீட்பு
ஆத்தூர் பகுதியில் மழையால் பாதித்தது மக்காசோள பயிர்கள் விவசாயிகள் கவலை
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்