மணப்பாறையில் தாயிடம் ‘தண்ணி’யடிக்க பணம் கேட்ட தம்பிக்கு ஈட்டிக்குத்து ‘பாசக்கார’ அண்ணன் கைது
10/20/2020 4:39:25 AM
மணப்பாறை, அக்.20: மணப்பாறை மேலகாட்டுப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி. கணவரை இழந்த இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் விஸ்வநாதன் கொத்தனாராகவும், இவரது தம்பி உதயகுமார் டிரைவராகவும் வேலை செய்து வருகின்றனர். இதில் உதயகுமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று உதயகுமார், தாய் லட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த மூத்த மகன் விஸ்வநாதன் தம்பியை கண்டித்துள்ளார். இதில் கைகலப்பு ஏற்பட்டு வீட்டிலிருந்த எலி குத்தும் ஈட்டியை எடுத்து விஸ்வநாதன், உதயகுமாரை 2 முறை வயிற்றில் குத்தியுள்ளர். இதில், படுகாயமடைந்த உதயகுமார் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தகவலறிந்த மணப்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விஸ்வநாதனை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு திருச்சி மாவட்டத்தில் 23,32,886 வாக்காளர்கள்
புதிதாக 72,447 பேர் சேர்ப்பு ஹம்சவாகனத்தில் நம்பெருமாள் தண்ணீர் கலந்து மதுவிற்ற ரவுடி கைது
லேத் பட்டறை மெக்கானிக்கிடம் கத்தியைகாட்டி பணம் பறித்தவர் கைது
திருச்சி-தஞ்சை திருமண்டலத்தின் 37வது பேரவைக்கூட்டம்
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்
நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!