பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்
10/20/2020 4:24:48 AM
கரூர், அக். 20: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கரூர் நகரம் மற்றும் தாந்தோணி ஒன்றியக்குழு சார்பில் கோரிக்கை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு நகர செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமச்சந்திரன், பாரதிதாசன், நிர்மல்ராஜ், ரம்யா, ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் பால்ராஜ் உட்பட அனைத்து நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். வீட்டு மனை இல்லாத அனைவருக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். வீட்டு மனைப்பட்டா உள்ளவர்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும். குடியிருப்பு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள 2400 வீடுகளையும், வீடில்லாதவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். மகளிர் சுய நிதி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து இதே கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, கோட்டாட்சியர் பாலசுப்ரமணியத்திடம் வழங்கி சென்றனர்.
மேலும் செய்திகள்
கரூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திரளான பக்தர்கள் பங்கேற்பு குளித்தலை அரசு ஆண்கள் பள்ளியில் 26 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு குளித்தலை, ஜன.28:குளித்தலை அரசு ஆண்கள் மேல்
கரூரில் நடந்த கொலை சம்பவத்தை கண்டித்து திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்
பஞ்சமாதேவி அருகே பாசனவாய்க்காலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு
18வயது பூர்த்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் அட்டை பெறுவதற்கு 31ம் தேதி வரை சிறப்பு முகாம்
கலெக்டர் தகவல் குளித்தலை அருகே 2 கார்கள் மோதி கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!