மரக்காணம் அருகே சோகம் குடும்ப பிரச்னையில் தாய், 2 மகள்கள் விஷம் குடிப்பு சிகிச்சை பலனின்றி மூத்த பெண் சாவு
10/18/2020 7:18:25 AM
மரக்காணம், அக். 18: குடும்ப பிரச்னையில் தாய், 2 மகள் விஷம் குடித்தனர். இதில் பிளஸ் 2 படிக்கும் மூத்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே செட்டிக்குப்பம் கிராமம் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் குமார்(43), விவசாயி. இவரது மனைவி கவிதா(38). இவர்களுக்கு பிளஸ் 2 படிக்கும் மகாலட்சுமி(17), 10ம் வகுப்பு படிக்கும் கோமதி(14) என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். குமாருக்கும், அவரது மனைவி கவிதாவுக்கும் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கவிதா மற்றும் அவரது 2 மகள்கள் அன்றைய தினம் இரவு விவசாயத்துக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளனர். மறுநாள் காலையில் யாரும் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த குமார் சென்று பார்த்தபோது மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது உறவினர்களுடன் 3 பேரையும் மீட்டு புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார். கவிதா, கோமதி ஆகியோருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மரக்காணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
டிராக்டர் திருடிய வாலிபர் கைது
அரசு பேருந்து ஓட்டுனர்கள் இடையே தகராறு
கொரோனாவுக்கு மூதாட்டி பலி புதுவையில் புதிதாக 36 பேருக்கு தொற்று
நாட்டு துப்பாக்கியால் விலங்குகளை வேட்டையாடிய 8 பேர் கைது
புதிதாக முதியோர் உதவித்தொகை வழங்க ஒப்புதல் அமைச்சரின் போராட்டத்தால் 17 கோப்புகளுக்கு அனுமதி
தமிழகம் மற்றும் புதுவையில் ரூ.10 ேகாடி மோசடி பைனான்ஸ் நிறுவன உரிமையாளர், 6 பேர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்