பொதுப்பணித்துறை உதவி இயக்குநரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும்
10/18/2020 4:09:13 AM
ஈரோடு,அக்.18: ஈரோட்டில் பொதுப்பணித்துறை உதவி இயக்குநர் வீட்டில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர். ஈரோடு பொதுப்பணித்துறை முதுநிலை கொதிகலன் (பாய்லர்) உதவி இயக்குநர் மகேஷ் பாண்டி, தொழிற்சாலைகளில் பாய்லர் உறுதி சான்று வழங்க லஞ்சம் பெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி., திவ்யா தலைமையிலான போலீசார் கடந்த 13ம் தேதி உதவி இயக்குநர் மகேஷ் பாண்டி அலுவலகத்தில் திடீர் ஆய்வு நடத்தி கணக்கில் வராத ரூ.1.61 லட்சம் பணத்தை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மகேஷ் பாண்டி (50) மற்றும் அவருக்கு லஞ்சம் வாங்க புரோக்கராக செயல்பட்டு வந்த பவானி எலவமலையை சேர்ந்த ராஜ்குமார் (45) இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஈரோடு சங்கு நகரில் உள்ள மகேஷ் பாண்டியின் வீட்டில் ரூ.60 ஆயிரம் ரொக்கம், ரூ.30 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல், மகேஷ் பாண்டியனின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி பல லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி., திவ்யா கூறியதாவது: பொதுப்பணித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், வீட்டிலும் ரொக்கம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல், தேனி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிலும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை தயாரித்து, ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, உரிய விளக்கம் அளித்தால், நீதிபதி அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பார்.
மேலும் செய்திகள்
பவானி அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி பெண் பலி
பு.புளியம்பட்டி சந்தையில் விதை வெங்காயம் விலை குறைந்தது
தாளவாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்து வீட்டின் கூரையை சேதப்படுத்திய யானை
தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 1,300டன் புழுங்கல் அரிசி
ஈரோடு அரவிந்த் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்
இந்து இண்டர்நேஷனல் பள்ளி ஆச்சார்யா கல்விக்குழுமத்துடன் இணைப்பு
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!