பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி அதிரடி கைது
10/16/2020 6:25:38 AM
சென்னை, அக். 16: பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். சிந்தாதரிப்பேட்டை என்.என் காலனி எப் பிளாக்கை சேர்ந்தவர் சஞ்சய். ரவுடியான இவர் சிந்தாதரிப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் கடந்த 10ம் தேதி 21 வது பிறந்தநாளை கிழக்கு கூவம் சாலையில் நண்பர்களுக்கு மது விருந்து அளித்து பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சுரேஷ் என்பர் புகார் அளித்தார். இதன்படி ரவுடி சஞ்சய், கணேஷ் (22), பாலாஜி (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். டிபி சத்திரத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பரை போலீசார் தேடி வருகின்றனர். நடுரோட்டில் கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
கம்பெனி கம்பெனியா சென்று வேலை கேட்டு வேன்களை திருடிய பலே வாலிபர் கைது
இந்திய கம்யூ. தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி
கண்ணாமூச்சி விளையாடலாம் என கூறி குழந்தைகளை ஆட்டோவில் கடத்த முயன்ற மர்ம கும்பல்: பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்
முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை: அப்போலோ டாக்டர்கள் சாதனை
பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் மியூசியமாகிறது
1.5 கோடி நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்