நரிக்குடி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் ரத்து திமுக கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
10/2/2020 4:50:33 AM
திருச்சுழி, அக். 2: நரிக்குடி ஒன்றியத்தில் நேற்று கவுன்சிலர் கூட்டம் நடைபெறுமென அனைத்து கவுன்சிலர்களுக்கும் அஜந்தா( கூட்டப்பொருள்) அனுப்பப்பட்டது. ஆனால், திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். ஆனால் சேர்மன், துணை சேர்மன் மற்றும் மூன்று கவுன்சிலர் பங்கேற்றனர். 14 பேரில் 5 பேர் மட்டுமே பங்கேற்றதால் கூட்டம் நடத்த இயலாத எனவும், அசாதாரண சூழ்நிலை உள்ளதாக கூறி பிடிஓ சுப்பிரமணியிடம் கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு கூறிவிட்டு கையெழுத்திடாமல் சேர்மன் பஞ்சவர்ணம் கூட்ட அரங்கத்தை விட்டு சென்றார். இதனையடுத்து அதிகாரிகளும் சென்றனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் வராததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து துணைசேர்மன் ரவிச்சந்திரன் கூறுகையில், ``ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டுமென இங்குள்ள அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்’’ எனக் கூறினர். திருச்சுழி டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கொலை வழக்கு விசாரணையை டிஎஸ்பி கண்காணிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
சிவகாசியில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்
வனத்துறை கட்டுப்பாடுகளை கண்டித்து கோவிலாறு அணை பகுதியில் குடியேறிய மலைவாழ் மக்கள்
சிவகாசி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் நிலுவை வழங்கல்
கால்நடை சார்ந்த தொழில்களுக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
திருவில்லிபுத்தூர் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் பாதுகாப்பின்றி பாழாகும் பறிமுதல் வாகனங்கள்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!