முதியோர் தினத்தில் நெகிழ்ச்சி 404 ஊராட்சிகளில் இன்று நடக்கவிருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து
10/2/2020 4:39:08 AM
திருச்சி, அக்.2: திருச்சி மாவட்டத்தில் 404 ஊராட்சிகளில் இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் கொரானா பரவலை தடுக்கவும், மக்கள் நலன் கருதியும் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார். அக்.2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். கிராம சபை கூட்டம் என்பது கிராம சுயராஜ்யத்தை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரானா பெருந்தொற்று நோய் பரவல் காரணமாக இக்கூட்டம் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளில் அக்.2 (இன்று) கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் சிவராசு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். ஆனால் கொரானா பெருந்தொற்று நோய் பரவலை தடுக்கவும், மக்கள் நலன் கருதியும் திருச்சி மாவட்டத்தில் 404 ஊராட்சிகளில் இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் சிவராசு நேற்றிரவு தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
திமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை
11 மாத குழந்தையின் துண்டான விரல் மீண்டும் கிடைத்தது டெல்டா மாவட்டங்களில் வெற்றிகரமான முதல் அதி நுண் அறுவை சிகிச்சை
திருச்சி தொழிலதிபர் வீரசக்தி மக்கள் நீதிமய்யத்தில் இணைந்தார் திருச்சியில் குறைவான பேருந்துகளே இயக்கம்
காத்திருப்பு போராட்டத்தில் பரபரப்பு அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகி மயங்கி விழுந்தார் விஷப்பூச்சி கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி
மாற்றுத்திறனாளிகள் 35 பேர் கைது
3வது நாளாக சாலைமறியல்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!