மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
10/1/2020 2:10:55 AM
பொன்னேரி: பொன்னேரி அடுத்த ஆவூர் மேட்டு காலனி சேர்ந்தவர் ரவி. இவரது மகன் புகழேந்தி (20). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே பகுதி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த எழிலரசன் என்பவரின் 16வயது மகள் பொன்னேரி உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரும் புகழேந்தியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் புகழேந்தி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்தவுடன் பிரியாவின் தந்தை எழிலரசன் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். பின்னர் வழக்குப் பதிந்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
வங்கி கடன் செலுத்துவதில் பிரச்னை மின்கோபுரத்தில் ஏறி கண்டக்டர் தற்கொலை முயற்சி: ஆவடி பணிமனையில் பரபரப்பு
ஆர்.கே.பேட்டை அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
வட சென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்
அரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பலி: திருவள்ளூரை சேர்ந்தவர்கள்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்
வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!