அருப்புக்கோட்டை நர்ஸ் வீட்டில் 50 பவுன் கொள்ளை
3/20/2020 2:33:43 AM
அருப்புக்கோட்டை, மார்ச் 20: அருப்புக்கோட்டையில் நர்ஸ் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை-மதுரை ரோடு ராஜீவ்நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மனைவி ராமலட்சுமி(50). அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி, அருகில் சாவியை ஒளித்து வைத்துவிட்டு வேலைக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், சாவியை எடுத்து கதவை திறந்து, பீரோவில் இருந்த 50 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு சென்றனர்.
மாலையில் வீட்டிற்கு வந்த ராமலட்சுமி, நகை கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். எஸ்பி பெருமாள், டிஎஸ்பி வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வைத்து சோதனை நடத்தப்பட்டது. சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்.
மேலும் செய்திகள்
சாத்தூர் வைப்பாற்றில் 200 ஆண்டுகளாக நடந்து வந்த மணல் மேட்டு திருவிழாவுக்கு தடை பொதுமக்கள் ஏமாற்றம்
திருச்சுழி பகுதியில் மழையில் பாதித்த பயிர்கள் ஆய்வு
591 மதுபாட்டில் பறிமுதல்
பிளவக்கல் அணையில் கூடுதல் நீர் திறப்பு 100 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின விவசாயிகள் கவலை
10 மாதங்களுக்கு பின் சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் திறப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி
2 மாதங்களாக பூட்டி கிடக்கும் ஆலைகள் சிவகாசியில் வேலையின்றி தவிக்கும் பட்டாசு தொழிலாளர்கள் நலவாரியத்தை உடனே செயல்படுத்த கோரிக்கை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்