வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை செலுத்தலாம்
3/20/2020 12:40:17 AM
வேலூர், மார்ச் 20: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைத்துள்ள பெட்டியில் மனுக்களை செலுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா பாதிப்பை தடுக்க பொதுமக்கள் ஒன்று கூடும் மக்கள் குறைதீர்வு கூட்டம் வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தினமும் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளிக்க பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அதிகாரிகள் மனுக்களை பெற முடியாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களை அளிக்க வரும் பொதுமக்களுக்காக நுழைவாயிலில் பெரிய பெட்டி நேற்று வைக்கப்பட்டது. குறைகள், கோரிக்கை மனுக்களை கொண்டு வரும் பொதுமக்கள் இந்த பெட்டியில் மனுக்களை செலுத்திவிட்டு செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் தடையை மீறி மது விற்பனை 47 பேர் கைது
காணும் பொங்கலையொட்டி சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்புவதில் மாதம்தோறும் ₹20 லட்சம் முறைகேடு தொழிற்சங்கத்தினர் பகீர் குற்றச்சாட்டு வேலூர் போக்குவரத்து மண்டலத்தில்
பாமக முன்னாள் நிர்வாகி குண்டாசில் கைது கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மோசடி
போலி டாக்டர் 10 ஆண்டுகளாக நடத்திய கிளினிக்கிற்கு ‘சீல்' நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தது அம்பலம் ஒடுகத்தூரில் அதிகாரிகள் அதிரடி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்