அரசு ஆடவர் கல்லூரியில் மீன் வளர்ப்பு பயிற்சி
2/28/2020 3:20:44 AM
கிருஷ்ணகிரி, பிப்.28: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரியில் மீன் வளர்ப்பு குறித்து தேசிய பயிற்சி பட்டறை நடந்தது. பயிற்சி பட்டறையை கல்லூரி முதல்வர் ரோஸ்மேரி துவக்கி வைத்தார். துறைத் தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை அரசு கல்லூரி பேராசிரியர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வண்ண மீன் வளர்ப்பு முறையும், பொருளாதாரமும் என்ற தலைப்பில் பேசினார். இதில், கரூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பாலகிருஷ்ணன், மீன்களைத் தாக்கும் நோய்களும், அவற்றை தடுக்கும் முறைகளும் என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியின் இறுதியாக மாணவர்கள் பாரூர் திலேபியா மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று, மீன்களை பார்வையிட்டனர். நிலைய ஆராய்ச்சியாளர் சோமசுந்தரலிங்கம், மீன் வளர்த்தலில் தற்கால நிலை மற்றும் வளர்ப்பு முறைகளை செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி பட்டறையை பிரகாச சாகய லியோன் மற்றும் மணிவேலு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
மேலும் செய்திகள்
ராயக்கோட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
ஓய்வூதியர்களுக்கு மலைவாழ் படி ஆர்டிஓவிடம் மனு
உத்தனப்பள்ளி அருகே மினிலாரி-பஸ் மோதல் 30 பயணிகள் காயம்
20 வருட வாடகை பாக்கி பேட்டராய சுவாமி கோயில் கடைகளுக்கு நோட்டீஸ்
கிருஷ்ணகிரி, ஓசூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
விபத்தில்லா மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு அவசியம் சாலை பாதுகாப்பு விழாவில் கலெக்டர் பேச்சு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்