தீ விபத்தில் சிக்கிய தொழிலாளி பலி
2/20/2020 6:08:54 AM
ஓசூர், பிப்.20: ஓசூரில் குடோன் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சோமசேகர்(38), நெசவு தொழிலாளி. இந்நிலையில், கடந்த 13ம் தேதி இரவு வீட்டில் இருந்த அனைவரும் உறங்க சென்றனர். அதிகாலை எழுந்து லைட் சுவிட்சை போட முயன்றார். அப்போது, பயங்கர சப்தத்துடன் லைட் சுவிட்ச் வெடித்தது. இதில் சிலிண்டரில் கியாஸ் கசிந்து தீப்பற்றி வீடு எரிந்தது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பின்னர், காயத்துடன் இருந்த சோமசேகர், அவரது மனைவி ஷீலா (26), குழந்தைகள் புவனகிரி (4), தனியா (5) ஆகியோரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சோமசேகர், ஷீலாவை பெங்களூரு தனியார் மருத்தவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சோமசேகர் பலியானார். ஷீலா மற்றும் 2 குழந்தைகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ராயக்கோட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
ஓய்வூதியர்களுக்கு மலைவாழ் படி ஆர்டிஓவிடம் மனு
உத்தனப்பள்ளி அருகே மினிலாரி-பஸ் மோதல் 30 பயணிகள் காயம்
20 வருட வாடகை பாக்கி பேட்டராய சுவாமி கோயில் கடைகளுக்கு நோட்டீஸ்
கிருஷ்ணகிரி, ஓசூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
விபத்தில்லா மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு அவசியம் சாலை பாதுகாப்பு விழாவில் கலெக்டர் பேச்சு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்