தீ விபத்தில் சிக்கிய தொழிலாளி பலி
2/20/2020 6:08:54 AM
ஓசூர், பிப்.20: ஓசூரில் குடோன் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சோமசேகர்(38), நெசவு தொழிலாளி. இந்நிலையில், கடந்த 13ம் தேதி இரவு வீட்டில் இருந்த அனைவரும் உறங்க சென்றனர். அதிகாலை எழுந்து லைட் சுவிட்சை போட முயன்றார். அப்போது, பயங்கர சப்தத்துடன் லைட் சுவிட்ச் வெடித்தது. இதில் சிலிண்டரில் கியாஸ் கசிந்து தீப்பற்றி வீடு எரிந்தது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பின்னர், காயத்துடன் இருந்த சோமசேகர், அவரது மனைவி ஷீலா (26), குழந்தைகள் புவனகிரி (4), தனியா (5) ஆகியோரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சோமசேகர், ஷீலாவை பெங்களூரு தனியார் மருத்தவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சோமசேகர் பலியானார். ஷீலா மற்றும் 2 குழந்தைகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா கோலாகலம்
போச்சம்பள்ளி அருகே பாமக பேனர் கிழிப்பு
மாவட்டத்தில் 323 துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொக்லைன் வாடகை அதிகரிப்பு
தளியில் சாலை பணிகள் துவக்கம்
தேன்கனிக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் அன்னதானம் தேன்கனிக்கோட்டை,
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்