பென்னாத்தூர் அடுத்த கேசவபுரத்தில் பாழடைந்து கிடந்த அங்கன்வாடி மைய கட்டிடம் இடித்து அகற்றம்
2/19/2020 12:57:32 AM
அணைக்கட்டு, பிப்.19: பென்னாத்தூர் அடுத்த கேசவபுரத்தில் பாழடைந்து கிடந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அகற்றி ₹9 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பென்னாத்தூர் அடுத்த கேசவபுரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் இயங்கி வருகின்றது. இதில் இரு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர். இதில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கப்பள்ளி அருகே அங்கன்வாடி மையத்திற்கு புது கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையிலை இருந்தது. இதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு மாற்றபட்டது.அவ்வாறு மாற்றப்பட்ட கட்டிடத்தில் குழந்தைகள் விளையாட, கல்வி கற்க போதிய இடவசதியில்லாத காரணத்தினால் சிரமப்பட்டு வந்தனர். இதனால், இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தை இடித்து அகற்றி, புது கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதுகுறித்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, எம்எல்ஏ நந்தகுமார், அங்கு புது அங்கன்வாடி மையம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹9 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். இருப்பினும் பணிகள் தொடங்காமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் அவரிடம் புகார் தெரிவித்தனர். இதையறிந்த எம்எல்ஏ நந்தகுமார் கடந்த 16ம் தேதி அங்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர், ஒப்பந்ததாரரை அழைத்து மையம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று சேதமடைந்த பழயை அங்கன்வாடி மைய கட்டிடம் ஜேசிபி மூலம் முழுவதும் இடிக்கப்பட்டது. தொடர்ந்து, புது கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் தடையை மீறி மது விற்பனை 47 பேர் கைது
காணும் பொங்கலையொட்டி சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்புவதில் மாதம்தோறும் ₹20 லட்சம் முறைகேடு தொழிற்சங்கத்தினர் பகீர் குற்றச்சாட்டு வேலூர் போக்குவரத்து மண்டலத்தில்
பாமக முன்னாள் நிர்வாகி குண்டாசில் கைது கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மோசடி
போலி டாக்டர் 10 ஆண்டுகளாக நடத்திய கிளினிக்கிற்கு ‘சீல்' நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தது அம்பலம் ஒடுகத்தூரில் அதிகாரிகள் அதிரடி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்