கன்றுக்குட்டி பலி; விவசாயிகள் மறியல் சோழவந்தான் அருகே கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது
2/17/2020 6:33:25 AM
சோழவந்தான், பிப்.17: சோழவந்தான் அருகே கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு பகுதியில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பாலாஜி, காடுபட்டி எஸ்.ஐ.ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கும்பலாக இருந்த சந்தேகத்திற்கிடமான ஐந்து நபர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் மதுரை மேலமடை சையது இப்ராஹிம் (22), பீபிகுளம் நியாஸ்(22), செல்லூர் தட்சிணாமூர்த்தி (21), மணிநகரம் அரவிந்தன்(24) மற்றும் கச்சிராயிருப்பு பிரவீன்(21) ஆகியோர் என தெரியவந்தது.
மேலும் மதுரையில் ஒன்றாக படித்த நண்பர்களான இவர்கள் வேலைக்கு செல்லாமல் சுற்றித் திரிந்துள்ளனர். இதனால் இப்பகுதியில் கொள்ளை மற்றும் வழிப்பறி செய்வதற்காக ஒன்று கூடி திட்டமிட்ட போது தான் போலீசிடம் சிக்கியுள்ளனர். இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
பயோமெட்ரிக்கில் தொடர் பிரச்னை ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
10ம்,12ம் வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு சத்து மாத்திரை
சோழவந்தானில் ரூ.25லட்சத்தில் புதிய பாலம்
போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டுனர்கள் தாமாக பின்பற்ற வேண்டும் போலீஸ் கமிஷனர் அறிவுரை
மதுரை ஆனையூரில் முத்தரையர் சிலை அமைக்க பூமி பூஜை
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்