தேவாரம் சாலையில் இயங்கிடும் டாஸ்மாக்கை இடமாற்ற வேண்டும் ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம்
2/13/2020 6:20:40 AM
தேவாரம், பிப்.13: டி.ரெங்கநாதபுரம்-தேவாரம் சாலையில் இயங்கிடும் அரசு டாஸ்மாக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும் என்று ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேவாரம் அருகே டி.ரெங்கநாதபுரம் ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் வசந்தி சிவசூரியன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் திருமலைராஜ் வரவேற்றார். கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்களை ஊராட்சி செயலர் ஆனந்தன் வாசித்தார். தீர்மான விபரம்:
கிராமத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதுடன், இதனை பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிப்பது, டி.ரெங்கநாதபுரம் கிராம ஊராட்சி செல்லும் சாலையில் இயங்கிடும் அரசு டாஸ்மாக் மதுபான கடையினால் மக்கள் நடந்து செல்லமுடியாத நிலை உள்ளது. இங்கு குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதனை உடனடியாக தேனி மாவட்ட கலெக்டர் இடமாற்றம் செய்யவேண்டும்.
கிராமங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை உடனடியாக மேற்கொள்வதற்கு தேவையான நிதியை பெறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்
உத்தமபாளையம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை நிறுத்தம்
மதுரைக்கு மாற்று தண்ணீர் திட்டம் கோரி கூடலூரில் கவன ஈர்ப்பு பேரணி
10 மாதங்களுக்கு பின் சுருளி அருவி திறப்பு குளிக்க தடை நீடிப்பால் ஏமாற்றம்
மானிய விலை சிமென்ட் கிடைப்பதில் சிக்கல் பாதியில் நிற்கும் கட்டிட பணிகள்
சின்னமனூர் அருகே புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!