பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு
2/11/2020 1:14:34 AM
திண்டிவனம், பிப். 11: ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளிமேடு பேட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து ஏராளமான பயணிகள் திண்டிவனம், வந்தவாசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும், பேருந்து நிறுத்தம் அருகே அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு செல்லவும், வெயில் மழை என்றும் பாராமல் பேருந்துக்காக பலமணி நேரம் காத்திருக்கும் சூழல் இருந்து வந்தது.
இதனை கருத்தில் கொண்டு பொது மக்களின் பயன்பாட்டிற்காக மயிலம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மயிலம் எம்எல்ஏ மாசிலாமணி நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் ராஜாராம், காளி, அமராபதி, மணி, குமாரவேலன், திருஞானம், ஆறுமுகம், பாக்கியராஜ், ராஜதுரை, கோபாலகிருஷ்ணன், பெருமாள், ராமையா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
புதுவையில் 23 பேருக்கு கொரோனா
திமுக தலைமையில் தான் கூட்டணி புதுச்சேரியின் 30 தொகுதியில் வெற்றி பெறாவிடில் தற்கொலை செய்து கொள்வேன்
புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா
கலெக்டரின் உதவியாளர் உள்பட 7 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
கல்லூரி மாணவரிடம் ₹66 ஆயிரம் பணம் திருட்டு
புதுவையில் புதிதாக 16 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு 2 பேர் பலி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்