வீட்டில் பதுக்கிய 1 டன் புகையிலை, குட்கா பறிமுதல்
1/14/2020 2:18:48 AM
திருச்சி, ஜன.14: திருச்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் புகையிலை மற்றும் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி - சென்னை பைபாஸ் சாலை தாராநல்லூர் பகுதியில், குட்கா-புகையிலை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர கமிஷனருக்கு தகவல் தெரியவந்தது. உடனடியாக கமிஷனர் உத்தரவின் பேரில் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் சென்று தாராநல்லூர் பகுதியை சுற்றி சோதனை செய்தபோது அங்கு ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை-குட்கா பொருட்கள் வைத்துள்ளது தெரிய வந்தது. உடனடியாக அந்த வீட்டில் உள்ளவர்களை கைது செய்து சுமார் 1 டன் மதிப்பிலான புகையிலை மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
குட்காவை பதுக்கி வைத்த சிவக்குமார்(38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
ரயில் நிலையத்தில் நீண்ட வரிசை சங்கிலியாண்டபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாததால் பொதுமக்கள் மறியல்
திருச்சி பகுதியில் கஞ்சா விற்ற ரவுடி உட்பட 5 பேர் கைது
ஒன்றரை கிலோ பறிமுதல் கண்ணக்குடியில் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி
தடுத்து நிறுத்திய போலீஸ் லால்குடி அருகே நகர் ஊராட்சியில் ரூ.14 லட்சத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் திறப்பு
மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் பெற்றுத்தர எம்எல்ஏவிடம் விவசாயிகள் கோரிக்கை
கீரனூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் அத்யாவசிய பணிக்காக 4 கி.மீ., சுற்றி செல்லும் மக்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்