விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியில் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டும் அவலம்
12/11/2019 12:03:02 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட தெற்கு பெரியார் நகர், பாரிஜாதம் பூ தெருவில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் குப்பைத்தொட்டி வசதி இல்லாததால் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் கழிவு பொருட்களை தெருவின் அருகிலேயே திறந்த வெளியில் கொட்டி வருகின்றனர். மேலும் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் அவர்கள் பயன்படுத்தும் கழிவுநீர் அனைத்தும் தெருக்களில் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை விளைவித்து வருகிறது. இதனால் எந்நேரமும் அப்பகுதியில் கொசுத்தொல்லை ஏற்படுவதோடு மழைக்காலங்களில் குப்பைகளில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது.
அப்பகுதியில் உள்ள பன்றிகள் இரைதேடி குப்பைகளை கிளறி வருவதால் துர்நாற்றம் வீசி உணவு உண்ண முடியாத நிலையில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் சுகாதார நலன் கருதி அப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய் வாய்க்கால் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே டாஸ்மாக்கை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் போலீசாருடன் தள்ளுமுள்ளு- பரபரப்பு
வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை: பேராசிரியருக்கு 10 ஆண்டு சிறை மகிளா கோர்ட் தீர்ப்பு
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க தேர்தல் இன்று நடக்கிறது
கல்வராயன்மலையில் பயங்கரம் கல்லால் விவசாயி அடித்து கொலை
பாஜக நியமன எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்
திட்டக்குடி அருகே பரிதாபம் பைக் மீது லாரி மோதியதில் பிளஸ்1 மாணவர்கள் 2 பேர் பலி
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!