மனைவி கோபித்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை
12/10/2019 5:55:33 AM
திருச்சி, டிச.10: திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் அழகேசன்(34). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுதா. குழந்தை உள்ளது. அழகேசன் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் கோபித்துக்கொண்டு சுதா குழந்தையுடன் மணப்பாறையில் உள்ள தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். தனிமையில் இருந்த அழகேசன் நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கல்லணைக்கு வரும் 3,509 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறப்பு
வீராணம் ஏரிக்கு செல்கிறது பெண்ணிடம் தங்க செயினை பறித்த வாலிபர்கள் 4 மணி நேரத்தில் கைது
தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம்
பொங்கல் தொகுப்பு வழங்கக்கோரி சிஐடியூ ஆட்டோ டிரைவர்கள் பொங்கல் வைத்து போராட்டம்
வீட்டுச்சுவர் இடிந்து முதியவர் காயம்
10,008 வடைமாலை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு அஸ்வின்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்