அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், ரெஸ்டாரண்ட் திறப்பு பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை திருச்சி ஜிஹெச் தாய்,சேய் பிரிவில் டெல்லி சிறப்பு மருத்துவக்குழு ஆய்வு
12/10/2019 5:55:08 AM
திருச்சி, டிச.10: திருச்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனை தாய்,சேய் பிரிவில் டெல்லி சிறப்பு மருத்துவக்குழு நேற்று ஆய்வு நடத்தினர். திருச்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதில் உள்நோயாளிகளாக 700க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மருத்துவமனை வளாகத்தில் தாய் சேய் தீவிர சிசு வார்டு மற்றும் பிரசவ வார்டு உள்ளது. இங்கும் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்று சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் தாய், சேய் சிறப்பு திட்டத்தின்கீழ் டெல்லி மருத்துவமனை டாக்டர் யஷ்வந்த்வர்மா தலைமையிலான குழுவினர் நேற்று தாய், சேய் மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். இதில் கர்ப்பிணிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா மற்றும் குழந்தைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து இந்த ஆய்வு இன்றும் நடக்கிறது. ஆய்வின்போது டீன் வனிதா, சூப்பிரண்டு ஏகநாதன், மருத்துவமனை இருக்கை அதிகாரி சித்ரா ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
கல்லணைக்கு வரும் 3,509 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறப்பு
வீராணம் ஏரிக்கு செல்கிறது பெண்ணிடம் தங்க செயினை பறித்த வாலிபர்கள் 4 மணி நேரத்தில் கைது
தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம்
பொங்கல் தொகுப்பு வழங்கக்கோரி சிஐடியூ ஆட்டோ டிரைவர்கள் பொங்கல் வைத்து போராட்டம்
வீட்டுச்சுவர் இடிந்து முதியவர் காயம்
10,008 வடைமாலை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு அஸ்வின்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்