சேலம் தீவட்டிப்பட்டியில் பிரபல கொள்ளையன் குண்டாசில் கைது
12/9/2019 8:43:10 AM
சேலம், டிச.9: சேலம் தீவட்டிப்பட்டியில் பிரபல கொள்ளையனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, சிறை வைத்தனர்.சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சரவணன் (24), பிரபல கொள்ளையன். இவரை கடந்த மாதம், தீவட்டிப்பட்டி போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கொள்ளையன் சரவணன் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஓமலூர், தீவட்டிப்பட்டி பகுதியில் உள்ளது. தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால், கொள்ளையன் சரவணனை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க இன்ஸ்பெக்டர் முருகன், மாவட்ட எஸ்பி தீபா கனிகர் மூலம் கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையை ஏற்ற கலெக்டர், பிரபல கொள்ளையன் சரவணனை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் போலீசார் கொடுத்தனர்.
மேலும் செய்திகள்
அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்
சமத்துவ பொங்கல் விழா
30 சதவீத தனியார் மருத்துவமனை பணியாளர்களுக்கு விருப்பமில்லை
குடியிருப்புகளுக்கு செல்ல பாதை அமைக்க ஒப்புதல்
சூரியன் எப்எம் 93.9 சார்பில் சேலத்தில் விழிப்புணர்வு பிரசாரம்
திமுக மக்கள் கிராமசபை கூட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்