கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து
12/7/2019 6:33:12 AM
அண்ணாநகர், டிச.7: சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ள ‘பி’ சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. அரசு பேருந்துகள், பள்ளி வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால், இச்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், இந்த சாலையில் மாடுகள் கூட்டமாக திரிவதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இவ்வாறு சாலையில் திரியும் மாடுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
இதுகுறித்து வாகன ஒட்டிகள் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் வீசப்படும் காய்கறி கழிவுகளை சாப்பிடுவதற்கு வரும் மாடுகள், இந்த சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிவதால், தினசரி காலை மற்றும் மாலை வேலையில் பள்ளி வாகனங்கள், அலுவலகத்துக்கு செல்பவர்கள், 108 ஆம்புலன்ஸ், அரசு பேருந்துகள் நெரிசலில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் போக்குவரத்து இடையூறாக சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும். அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும், என வாகன ஒட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சென்னையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
எஸ்ஆர்எம் கல்லூரி விடுதி அறையில் மருத்துவ மாணவி தற்கொலை
வேலைக்கு அழைப்பது போல் நடித்து 11 பேரின் செல்போன் அபேஸ்: 3 பேர் கைது
மடிப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டில் ரூ.1.3 லட்சம் பறிமுதல்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை கண்காணிக்க 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமனம்: ஒரு மேஜையில் 3 பேருக்கு மட்டுமே அனுமதி
பொங்கலை முன்னிட்டு சென்னையில் கனரக, சரக்கு வாகனங்கள் நுழைய தடை: போக்குவரத்து போலீசார் உத்தரவு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்