அரூர் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வலியுறுத்தல்
12/5/2019 5:27:09 AM
அரூர், நவ.5: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. இதில், காலை மற்றும் மாலை நேரங்களில், சுற்று வட்டாரத்தை 1000க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வந்து செல்கின்றனர். மேலும் பள்ளி நேரம் முடிந்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அரூர் பகுதியில் பெய்த மழையால், விளையாட்டு மைதானம் முழுவதும் செடிகள் வளர்ந்து புதர் மண்டிய நிலையில் உள்ளது. இதனால் நடைபயிற்சி மேற்ெகாள்வோர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே விளையாட்டு மைதானத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, மைதானத்தை சீரமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அனுமன் ஜெயந்தி விழா
போகி பண்டிகை விழிப்புணர்வு பிரசாரம்
5பேருக்கு கொரோனா
வாட்ச் டவர் அமைத்து கண்காணிப்பு
₹7.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
விவசாயிகளுக்கு அழைப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்