ஒட்டன்சத்திரம் அருகே சாலை பணி பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி
12/5/2019 5:25:48 AM
ஒட்டன்சத்திரம், டிச. 5: ஒட்டன்சத்திரம் அருகே சாலை பணிக்காக தோண்டிய பள்ளத்தில் டூவீலர் கவிழ்ந்து வாலிபர் பலியானார். வேடசந்தூர் அடுத்த நடுபட்டியை காலனியை சேர்ந்த தங்கவேல் மகன் தினேஷ்குமார்(21). இவர் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்- வேடசந்தூர் சாலையில் கேதையுறும் பிரிவு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் டூவீலருடன் தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பட்டிவீரன்பட்டி அருகே மக்கள் கிராம சபை
கால்நடைகளுக்கு அளவான பொங்கல் கொடுத்தால் அமில நோயிலிருந்து பாதுகாக்கலாம்
கொடுத்த புகாருக்கு 4 நாளாகியும் நடவடிக்கை இல்லை அம்மையநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
கொத்தப்புள்ளி பூவோடையில் மழைநீரில் மூழ்கிய ரயில்வே சுரங்க பாதை எம்பி ஆய்வு
பொங்கல் பரிசு வழங்க கோரி ஆட்டோ தொழிலாளர்கள் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்
பழநி தைப்பூச திருவிழாவிற்கு 3,500 போலீசார் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் முடிவு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்