வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் காவல்துறை ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்
12/5/2019 5:16:12 AM
முசிறி , டிச.5: முசிறியில் நகைக் கடை உரிமையாளர்கள், டாஸ்மார்க் மேற்பார்வையாளர்கள், வட்டிக் கடை மற்றும் வியாபாரிகள் சங்கத்தினருடன் திருட்டை தவிர்த்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காவல்துறை சார்பில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முசிறி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமை வகித்தார். எஸ்ஐ., செல்லப்பா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முசிறி, தொட்டியம், தா.பேட்டை, மேட்டுப்பாளையம், காட்டுப்புத்தூர், துறையூர், உப்பிலியபுரம் பகுதிகளை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்கள், டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர்கள், வட்டிக்கடை மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் கலந்துகொண்டனர். அப்போது வங்கி மற்றும் பிற இடங்களுக்கு பணம் நகை கொண்டு செல்லும்போது பாதுகாப்புடன் கொண்டு செல்லவும், பணம் அதிகமாக எடுத்துச் செல்வதை தவிர்த்து 2, 3 தவணையாக பிரித்து எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் இரவு நேரங்களில் அதிக அளவு பணம் எடுத்துச் செல்வதை கூடுமானவரை தவிர்க்கவும்,தகுந்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லவும் வியாபாரிகளுக்கு போலீசாரால் அறிவுறுத்தப்பட்டது. சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றி திரிந்தால் அவர்கள் குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. பணி நிமித்தமாக வெளியே செல்லும்போது கவனத்தை திசை திருப்பும் வகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல் தாங்கள் செல்லும் காரியத்தில் கவனமுடன் இருக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.
வணிக நிறுவனங்கள் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும், கடைகளை மூடிவிட்டு செல்லும்போது சிசிடிவி கேமரா இயக்கத்தில் உள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ளவும், அதிக பதிவுகளை சேமிக்கும் திறன்கொண்ட கேமரா உபகரணங்களை பயன்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.நகைக்கடை மற்றும் பெரு ணிகர்கள் பணத்தை பெற்றுக்கொள்ள வங்கி நிர்வாகம் உரிய பாதுகாப்புடன் வாகனங்களை கடைக்கு நேரடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வங்கி அலுவலர்களுடன் கலந்துபேசி உரிய முடிவு எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
ரயில் நிலையத்தில் நீண்ட வரிசை சங்கிலியாண்டபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாததால் பொதுமக்கள் மறியல்
திருச்சி பகுதியில் கஞ்சா விற்ற ரவுடி உட்பட 5 பேர் கைது
ஒன்றரை கிலோ பறிமுதல் கண்ணக்குடியில் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி
தடுத்து நிறுத்திய போலீஸ் லால்குடி அருகே நகர் ஊராட்சியில் ரூ.14 லட்சத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் திறப்பு
மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் பெற்றுத்தர எம்எல்ஏவிடம் விவசாயிகள் கோரிக்கை
கீரனூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் அத்யாவசிய பணிக்காக 4 கி.மீ., சுற்றி செல்லும் மக்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்