வேதாரண்யம் அருகே மாற்றுத்திறனாளி விஷம் குடித்து சாவு
12/5/2019 5:08:41 AM
வேதாரண்யம், டிச.5: வேதாரண்யம் அருகே மாற்றுத்திறனாளி விஷம் குடித்து பலியானார்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா துளசியாப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாய்பு மரைக்காயர். இவரது மகன் ஹாஜா (50). மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஹாஜா உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். நேற்று ஹாஜா திருத்துறைப்பூண்டி சென்றுவிட்டு ஊருக்கு தனது இரு சக்கரவாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் விஷ மருந்தை அருந்தி விட்டுஆபத்தான நிலையில் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு வந்தவரைஅக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு முதலுதவி அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 3ம் தேதி இறந்து விட்டார். புகாரின்பேரில் வாய்மேடு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
நாகை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை
வேதாரண்யம் அருகே கடல் சீற்றத்தில் சிக்கிய 4 மீனவர்கள் கரை திரும்பினர்
மயிலாடுதுறை நகரில் சாலையில் தொடர்ந்து ஏற்படும் மெகா பள்ளம்
வேளாங்கண்ணி சாலையை சீரமைக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்
300 பேர் கைது கோயில்களில் தேங்காய் உடைத்து அர்ச்சனைக்கு அனுமதிக்க வேண்டும் சிவாச்சாரியார்கள் நிர்வாகிகள் வலியுறுத்தல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்