அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு
12/5/2019 5:08:01 AM
சீர்காழி, டிச.5: சீர்காழி அருகே 570 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள செங்கரும்பு வயல்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அறுவடைக்கு முன் சாய்ந்து இழப்பை ஏற்படுத்துமோ என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.நாகை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், காத்திருப்பு, நடராஜ பிள்ளை சாவடி, இளைய மதுக்கூடம், ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 570 ஏக்கரில் விவசாயிகள் செங்கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த செங்கரும்புகள் நல்ல நிலையில் வளர்ந்து உள்ளன. இந்த கரும்புகள் பொங்கல் பண்டிகைக்கு அறுவடைக்கு தயாராகும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள். இந்த நிலையில் இந்தப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு வயல்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கரும்பு வளர்ச்சி ஏற்பட்டாலும் கரும்பின் இனிப்பு குறைய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் செங்கரும்பு வயலில் சாய்ந்து விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும் என கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்
லாரியில் வந்த எழுது பொருட்கள் புளியந்தோப்பு பகுதி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்
கலெக்டருக்கு மனு நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பாளர் மரணம் பணப்பயன் கேட்டு ஓராண்டாக அலையும் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கரும்பு பாதிப்பை கணக்கெடுக்காத வேளாண் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நேபாளத்தில் நீளம் தாண்டுதல் போட்டியில் சாதனை வேதாரண்யம் வாலிபருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு
பணிகள் முடிந்தும் பூட்டியே கிடக்கும் மாவட்ட ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றத்தை திறக்க வேண்டும்
வேதாரண்யம் பகுதியில் நெல் அறுவடை மும்முரம் மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!