அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு
12/5/2019 5:08:01 AM
சீர்காழி, டிச.5: சீர்காழி அருகே 570 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள செங்கரும்பு வயல்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அறுவடைக்கு முன் சாய்ந்து இழப்பை ஏற்படுத்துமோ என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.நாகை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், காத்திருப்பு, நடராஜ பிள்ளை சாவடி, இளைய மதுக்கூடம், ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 570 ஏக்கரில் விவசாயிகள் செங்கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த செங்கரும்புகள் நல்ல நிலையில் வளர்ந்து உள்ளன. இந்த கரும்புகள் பொங்கல் பண்டிகைக்கு அறுவடைக்கு தயாராகும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள். இந்த நிலையில் இந்தப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு வயல்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கரும்பு வளர்ச்சி ஏற்பட்டாலும் கரும்பின் இனிப்பு குறைய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் செங்கரும்பு வயலில் சாய்ந்து விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும் என கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்
வேதாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்ப திருவிழா
தேர்தல் நடத்தை விதிமுறை அமலால் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து
சட்டமன்ற தேர்தல் விதிமுறை ஆலோசனை கூட்டம்
திமுக ஆலோசனை கூட்டம்
கதிர் அடிக்கும் இயந்திரத்தில் சிக்கி டிரைவர் கை துண்டானது
காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்