மதுரை விராட்டிபத்து பகுதியில் பழுதடைந்த சாலைகளில் மழைநீர்-கழிவுநீர் சங்கமம் போராட்டம் நடத்தப்போவதாக மக்கள் அறிவிப்பு
12/4/2019 1:26:53 AM
மதுரை, டிச.4: மதுரை விராட்டிபத்து பகுதியில் பழுதடைந்த சாலைகளில் மழைநீருடன், சாக்கடை நீரும் தேங்கிக் கிடந்து கொசுக்களுடன், நோய்களை பரப்பி வருகிறது. கண்டுகொள்ளாத மாநகராட்சியை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.மதுரை மாநகராட்சியில் உள்ள விராட்டிபத்து பகுதியில் முத்துத்தேவர் காலனி மற்றும் ஹரிஜன் காலனி ரோடு மிக மோசமாக இருக்கிறது. இதில் வாகனங்களில் மட்டுமல்லாது, நடந்தும் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், இந்த ரோட்டில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்து தேங்கியுள்ளன. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி, இப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களாலும் பாதித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த ராஜன் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிக குடும்பங்கள் இருக்கின்றன. பாதாளச்சாக்கடை வசதி இருந்தும், மெயின் லைன் இந்த பகுதியில் இருப்பதால், பம்பிங் ஸ்டேஷனிலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்படாமல், பாதாளச்சாக்கடை மூடி வழியாக பீறிட்டு ஆறாக ஓடுகிறது. துர்நாற்றத்துடன், கியாஸ் வெளிப்படுகிறது. இந்த சாக்கடைக் கழிவுநீர் ரோட்டில் தேங்கி, மழைநீருடன் கலந்து நோய்களை பரப்புகிறது. கொசுக்களால் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறோம். ஒரு அடிக்கும் மேலாக இங்குள்ள மழைநீர் வாய்க்கால்களிலும் கழிவுநீர் தேங்கிக் கிடந்து, சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மாநகராட்சி சிறப்பு நடவடிக்கை மூலம் எங்கள் பகுதி சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். பம்பிங் ஸ்டேஷன் செயல்படவும், கழிவுநீர் வெளியேறாமலும் செய்ய வேண்டும். சீர் செய்யாவிட்டால், மக்களைத் திரட்டி மாநகராட்சியை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.
மேலும் செய்திகள்
பயோமெட்ரிக்கில் தொடர் பிரச்னை ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
10ம்,12ம் வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு சத்து மாத்திரை
சோழவந்தானில் ரூ.25லட்சத்தில் புதிய பாலம்
போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டுனர்கள் தாமாக பின்பற்ற வேண்டும் போலீஸ் கமிஷனர் அறிவுரை
மதுரை ஆனையூரில் முத்தரையர் சிலை அமைக்க பூமி பூஜை
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!