வீதிக்கு வந்த குடும்ப தகராறு டிராபிக் கான்ஸ்டபிளை நடுரோட்டில் புரட்டி எடுத்த ‘பாசக்கார’ மனைவி
11/28/2019 12:00:55 AM
* திட்டியதை படம் எடுத்த கணவருக்கு பாடம் எடுத்த மனைவி * சாந்தோம் சிக்னலில் பரபரப்பு
சென்னை: சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து காவலராக லெஸ்லிராஜ் பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவரது மனைவி கிளாடியஸ்க்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு லெஸ்லிராஜ் சாந்தோம் சிக்னலில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய மனைவி கிளாடியஸ் அங்கு வந்து டிராபிக் பணியில் இருந்த லெலிஸ்ராஜ் குறித்து தரக்குறைவான வார்த்தையில் பேசி தகராறில் ஈடுபட்டார். உடனே, லெஸ்லிராஜ் தன்னுடைய செல்போனில் மனைவி பேசியதை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, பொதுமக்கள் முன்னிலையில் கணவர் என்றும் பாராமல் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். பதிலுக்கு போக்குவரத்து காவலரும் மனைவியை தாக்கியுள்ளார்.
இதனால் மூன்று பக்கமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டு உருண்டனர். இதில் போக்குவரத்து காவலரின் சீருடை கிழிந்து தொங்கியது. இதை பார்த்த பொதுமக்கள் இருவரையும் விலக்கி விட்டனர். பின்னர் போக்குவரத்து காவலர் லெஸ்லிராஜ் மயிலாப்பூர் காவல்நிலையத்தில், தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாக அவரது மனைவி கிளாடியஸ் மீது புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பயங்கர சத்தத்துடன் ஏடிஎம் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு: சிசிடிவி மூலம் ஆசாமிக்கு வலை
தாம்பரத்தில் நூலகம், மீன் மார்க்கெட் சமுதாய நலக்கூடம் திறப்பு: டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்பு
பிரபல நகைக்கடையில் 5.20 கிலோ தங்கம் கொள்ளையடித்த ஊழியரை பிடிக்க ராஜஸ்தான் விரைந்தது தனிப்படை: செல்போன் எண் மூலம் நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழா
சென்னை கிழக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தேர்தல்: திமுக தலைமை அறிவிப்பு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!