தலைஞாயிறில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்
11/27/2019 12:04:08 AM
வேதாரண்யம், நவ.27: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் மணிஎழிலன் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் மகாகுமார் பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன், முன்னாள் எம்எல்ஏக்கள் மீனாட்சிசுந்தரம், காமராஜ் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற தீவிரமாக பாடுபடுவது, ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையுடன் பணியாற்றி செயல்பட வேண்டும். மாநகராட்சி மேயர் நகராட்சி தலைவர் பேரூராட்சி மறைமுகமாக தேர்ந்தெடுக்காமல் ஜனநாயக முறைப்படி மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும். யூரியா தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. பொதுக்குழு உறுப்பினர் வீரசேகரன் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
சுவர் விளம்பரம், கொடி கம்பம் அகற்றாத கட்சிகள் மீது வழக்கு
நாகை புதிய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவு ஆணையரிடம் உரிமையாளர்கள் வாக்குவாதம்
பேருந்து மோதி முதியவர் பலி
கோடியக்காட்டில் குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் மறியல் போராட்டம்
வங்கிகள் தனியார் மயம் கண்டித்து ஊழியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைப்பு மதிய உணவு திட்டம் மீண்டும் துவக்கம்
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்