சமயநல்லூர் அருகே டூவீலர் மீது வேன் மோதி கல்லூரி விரிவுரையாளர் பலி
11/22/2019 1:30:01 AM
வாடிப்பட்டி, நவ.22: சமயநல்லூர் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் தனியார் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாதம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (38). அழகர்கோயில் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மதுரையிலிருந்து வாடிப்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சமயநல்லூர் கட்டப்புளி நகர் என்னுமிடத்தில் பின்புறமாக வந்த சரக்குவேன் மோதியது. இதில் விஜயகுமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற சிறுவன் கைது
பாலமேட்டில் இன்ஸ்பெக்டர் வாகனம் கண்ணாடி உடைப்பு
வழிகாட்டு நெறிமுறைகளுடன் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு தூய்மை பணிக்கு ஒரு பள்ளிக்கு தலா ரூ.500 ஒதுக்கீடு
செல்லம்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
மதுரை மாவட்டத்தில் மல்லிகை ஏற்றுமதி மையம் 2 இடங்களில் அமையவுள்ளது மாணிக்கம் தாகூர் எம்பி தகவல்
திருமங்கலம் ஜிஹெச்சில் கொரோனா தடுப்பூசி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்