மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்ப்பு முகாம்
11/22/2019 12:42:42 AM
வேப்பூர், நவ. 22: வேப்பூர் தாலுகா அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் திட்டக்குடி ரவிச்சந்திரன், விருத்தாசலம் செந்தில்குமார், வேப்பூர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், மாற்று திறனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, இலவச கறவை மாடுகள் உட்பட பல கோரிக்கைகளை மனுக்களாக மாற்றுத்திறனாளிகள் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்தார்.
முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் சுந்தரவடிவேலு, சையத் சர்தார், வேப்பூர் துணை வட்டாட்சியர் பாலமுருகன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சாந்தி, வருவாய் ஆய்வாளர் வேப்பூர் பழனி, சிறுபாக்கம் குமார், விஏஓக்கள் ராஜாமணி, அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50வது நாளாக தொடர் போராட்டம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
அரசு மருத்துவமனை காவலாளியை தாக்கிய 3 பேர் கைது
வடலூர் வள்ளலார் சபையில் 150வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இன்று ேஜாதி தரிசனம்
நடராஜர் கோயிலில் தேசிய கொடியேற்றம்
வேப்பூர் அருகே சோகம் இரட்டையர் உள்பட 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாப பலி
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!