குற்றவாளிகளை கைது செய்ய கோரி விசி கட்சியினர் சாலை மறியல்
11/20/2019 7:35:46 AM
திருமயம்,நவ.20: திருமயம் அருகே கடந்த வாரம் விசி கொடி கம்பத்தை அவமரியாதை செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள புலிவலம் பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள விசி கட்சி கொடிகம்பத்தில் இருந்து கொடியை கடந்த வாரம் இறக்கிவிட்டு அதில் செருப்பை கட்டிதொங்கவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து அக்கட்சியினர் விசி கொடி கம்பத்தை அவமரியாதை செய்த மர்ம நபர்கள் மீது நமணசமுத்திரம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரை ஒருவரையும் கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விசி கட்சியினர் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி நேற்று அக்கட்சி சார்பில் திருச்சி-கரைக்குடி பைபாஸ் சாலையில் மறியல் செய்வதன முடிவு செய்து போஸ்டர் ஒட்டினர். இதை தொடர்ந்து போலீசார் திருமயம், அரிமளம், கே.புதுப்பட்டி, நமணசமுத்திரம் போலீசாரை காலை முதலே சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வந்தனர். இந்நிலையில் 50 பேர் போலீசார் கெடுபிடியை மீறி சாலை மறியல் செய்ய முற்றபட்டனர். அப்போதுபோலீசார்அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
புதுகையில் மழையால் அழுகும் நெற்கதிர்கள் இந்தாண்டு கசப்பான பொங்கல் என விவசாயிகள் வேதனை
அரிமளத்தில் ரூ.10 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
எம்எல்ஏ ரகுபதி திறந்து வைத்தார் பொன்னமராவதி பகுதியில் மழை மக்கள் கூட்டமின்றி பொங்கல் சந்தை
புதுக்கோட்டை மாவட்டத்தில் 37,942 கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும்
இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம் ஒரு நெல் மணியை கூட வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாத நிலை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்