வன்கொடுமை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி
11/20/2019 7:34:15 AM
மன்னார்குடி, நவ. 20: குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் எதிர்ப்பு தினத்தையொட்டி மன்னார் குடியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி கார்த்திக் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை மற்றும் வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி நவ 19ம் தேதி உலக குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினம் உலக பெண்கள் மாநாட்டு அமைப்பினரால் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தைகளை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல், வார்த்தைகளாலோ அல்லது உணர்வுகளை பாதிக்கும் வகையில் அவர்களிடம் நடந்து கொள்வது அவர்கள் மீதான வன்கொடுமையாக பார்க்கப்படுகிறது.இந்நிலையில் திருவாரூர் கலெக்டர் ஆனந்த் அறிவுறுத்தலின் பேரில் சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் சார்பில் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி மன்னார்குடியில் நடைபெற்றது. ராஜகோபால சுவாமி கோயில் அருகே தேரடி பகுதில் இருந்து துவங்கிய பேரணியை டிஎஸ்பி கார்த்திக் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் தாசில்தார் கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். பேரணியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து குழந்தைகள் காப்பகத்தில் நிறைவடைந்தது. அங்கு மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மேலும் செய்திகள்
ஐஎஸ்ஐ முத்திரையின்றி வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை
கலெக்டர் எச்சரிக்கை அழுகிய நெற்கதிர்களை கையில் ஏந்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
லாரி மோதி ஆழித்தேர் கூண்டு சேதம்
திருவாரூரில் பரபரப்பு மழையால் பாதித்த பயிர்களுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் சாலை மறியல்
105 பெண்கள் உள்பட 400 பேர் கைது குடவாசலில் பள்ளி இடிந்தது எதிரொலி பள்ளி கட்டிட உறுதித்தன்மை, முன்னேற்பாடு பணிகள்
கலெக்டர் நேரில் ஆய்வு திருவாரூரிலிருந்து கன்னியாகுமரிக்கு 1,200 மெ.டன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!!