முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் திரண்ட நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி
11/20/2019 4:15:17 AM
சேலம், நவ.20: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு, வீரபாண்டி ராஜா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:சேலம் மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகத்தின் ‘‘திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்’’ என்ற சுயசரிதை நூல் கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்டது. விழாவிற்கு தலைமை வகித்து நூலை வெளியிட்டதுடன், வீரபாண்டியாருக்கு புகழாரம் சூட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, சேலம் மாவட்ட திமுக மற்றும் எனது குடும்பத்தினர் சார்பில் நன்றியை காணிக்கையாக்குகிறேன். மேலும், இந்த விழாவில் நேரடியாக பங்கேற்ற மற்றும் தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்த மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த காவல் துறையினருக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் கட்சிக்கும், தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் உறுதுணையாய் இருந்து, திமுக ஆட்சியமைக்க அனைவரும் பாடுபட வேண்டும்.
மேலும் செய்திகள்
சேலம் மாவட்டத்தில் 4 நாளில் 3,016 பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
25,000 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
அறிவிக்கப்படாத மின்வெட்டு
ஏகாபுரத்தில் எருதாட்ட விழா 25 காளைகள் பங்கேற்பு
வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல்
காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூச விழா தேருக்கு சாரம் கட்டும் பணி மும்முரம்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!