ஊராட்சி குழு உறுப்பினர் பதவி திமுக சார்பில் விருப்ப மனு தாக்கல்
11/20/2019 12:52:29 AM
ஈரோடு, நவ. 20: மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட இளைஞரணி அமைப்பாளர் பவானிசேகர் விருப்பமனு தாக்கல் செய்தார்.தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் தங்களது தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு 13வது வார்டு உறுப்பினர் (மாவட்ட கவுன்சிலர்) பதவியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பவானி கே.ஏ.சேகர் தனது விருப்ப மனுவை நேற்று முன்தினம் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நல்லசிவத்திடம் தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் பவானி ஒன்றிய செயலாளர் துரைராஜ், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு: வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிப்பு
பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் கும்பாபிஷேகம்
ஈரோட்டில் 11பேருக்கு கொரோனா
தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சாலைகள் கேட்டு 1 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் தொடக்கம்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் குறைப்பில் குளறுபடி
முன்னாள் அமைச்சர் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்