திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ₹1 கோடி
11/20/2019 12:20:19 AM
திருவண்ணாமலை, நவ.20: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கையாக ₹1 கோடியே 10 லட்சம் கிடைத்தது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாத பவுர்ணமி நாளன்று, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் வருகின்றனர். கிரிவலம் வரும் பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்த பின்னர் நடக்கும்.
அதன்படி, ஜப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கடந்த 11ம் தேதி மாலை தொடங்கி 12ம் தேதி இரவு நிறைவடைந்தது. பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தனர். பவுர்ணமி நிறைவடைந்ததையடுத்து உண்டியல் காணிக்கை எண்ணும்பணி நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது. இதில் உண்டியல் காணிக்கையாக ₹1,10,26,315ம், 243 கிராம் தங்கம், 706 கிராம் வெள்ளி கிடைத்தது.
மேலும் செய்திகள்
ஆரணி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: ஆர்டிஓ விசாரனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
கீழ்பென்னாத்தூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்: வீட்டின் பூட்டு உடைத்து ₹1.60 லட்சம், நகை திருட்டு: மர்ம ஆசாமிகளுக்கு வலை
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் போர்மன்ன லிங்கேஸ்வரர் தேர் திருவிழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கொரோனா தடுப்பூசி போடுவதால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை வட்டார மருத்துவ அலுவலர் அட்வைஸ்
தேர்தல் கட்டுப்பாட்டால் குறைதீர்வு கூட்டம் ரத்து வீட்டுமனையை மீட்டுத்தரக்கோரி குடும்பத்துடன் கூலித்தொழிலாளி தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்