தோப்பநாயகம்- ஊரணிபுரம் சாலை குண்டும், குழியுமாக மாறிய அவலம்
11/19/2019 7:31:38 AM
ஒரத்தநாடு, நவ. 19: ஒரத்தநாடு அருகே கல்லணை கால்வாய் கரையில் செல்லும் தோப்பநாயகம்- ஊரணிபுரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் தினம்தோறும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த திருவோணம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள தோப்பநாயகம் கிராமத்தில் இருந்து ஊரணிபுரத்துக்கு செல்லும் சாலை கல்லணை கால்வாய் கரையில் செல்கிறது. இச்சாலையில் தினசரி தஞ்சை, பட்டுக்கோட்டைக்கு ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.இந்த சாலை சேமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும் சகதியாக மாறி விடுகிறது. இந்த சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் கல்லணை கால்வாய் ஆற்றுக்குள் தவறி விழும் நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினம்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வல்லம் பகுதிகளில் போர் வைக்கும் காலம் போனது வயலுக்குள் சென்று இயந்திரம் உருட்டும் வைக்கோல் கட்டுகள்
வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ஒரு கட்டு ரூ.70 வரை விற்பனை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க நாளை சிறப்பு முகாம்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் நவராத்ரி விழா
ஒரத்தநாடு இலவச மருத்துவ சிறப்பு முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளருக்கு பரிசு
தஞ்சாவூர் மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வு மக்கள் நலனுக்காக பாதியாக குறைப்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!