தேவனூர் ஏரியில் கிராவல் மண் திருட்டு: பொக்லைன், டிராக்டர் சிறைபிடிப்பு: பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை
11/14/2019 6:48:48 AM
ஜெயங்கொண்டம், நவ. 14:
தேவனூர் ஏரியில் அனுமதியின்றி கிராவல் வெட்டி எடுப்பதை கண்டித்து பொக்லைன், டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கிராமத்துக்கு உட்பட்ட அத்து மினி ஏரி 12 ஏக்கர் அளவில் உள்ளது. இந்த ஏரியில் கடந்த 3 மாதமாக அனுமதியின்றி கிராவல் வெட்டி எடுக்கப்படுவதாக ஜெயங்கொண்டத்தில் தாசில்தார் மற்றும் ஆர்டிஓ ஆகியோருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஏரியில் சாலை ஓரமாகவே சுமார் 10 ஆழத்தில் கிராவல் வெட்டி எடுத்துள்ளனர்.இதனால் இரவு நேரங்களில் சாலையில் செல்வோர் தவறி விழ நேரிடும் என பொதுமக்கள் அச்சப்பட்டனர். இப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு இந்த ஏரிேய பிரதானமாக விளங்கி வருகிறது.
இந்த ஏரியில் வண்டல் மண் எடுத்தால் கூட பரவாயில்லை. ஆனால் 10 அடி ஆழத்துக்கு கிராவல் எடுக்கப்படுகிறது. கிராவல் எடுப்பதால் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. வண்டல் மண் எடுப்பதோடு நிறுத்தி இருந்தால் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் அதிகளவில் டிராக்டர்கள் கிராவல் ஏற்றி செல்வதால் தூங்க முடியவில்லை. எனவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று இரவு 8 மணி அளவில் கிராவல் ஏற்றி செல்லும் வாகனங்கள், பொக்லைன், டிராக்டர்களை சிறைபிடித்தனர். இந்த தகவல் கிடைத்ததும் ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர்கள் முருகன், ராஜசேகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஜெயங்கொண்டம், நவ. 14:
தேவனூர் ஏரியில் அனுமதியின்றி கிராவல் வெட்டி எடுப்பதை கண்டித்து பொக்லைன், டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் செய்திகள்
பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி, வெங்கலத்தில் 8 வீடுகளில் 14.62 லட்சம் நகை, பணம் கொள்ளை
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 10,12ம் வகுப்புகளுக்கு 147 பள்ளிகள் திறப்பு
20 ஆயிரம் பேருக்கு 60 ஆயிரம் மாஸ்க் தயார் குளத்தில் தவறி விழுந்து சிறுமி பரிதாப பலி
2 குழந்தைகள் மீட்பு சாலையை கடக்க முயன்ற பெண் கார் மோதி பலி
சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பிரசாரம்
கலெக்டர் துவக்கி வைத்தாஅரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாளில் இணையதளம் வாயிலாக வந்த 47 மனுக்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!