சாத்தூரில் விதிமீறிச் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்
11/14/2019 6:12:40 AM
சாத்தூர், நவ. 14: சாத்தூரில் விதிமீறிச் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூரில் உள்ள பிரதான சாலையில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கோயில்கள், நீதிமன்றங்கள் ஆகியவை உள்ளன. இந்த சாலையில் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலை குடோன்கள் உள்ளன. இந்த குடோன்களிலிருந்து லாரிகள், சரக்கு வாகனங்கள் மூலம் தீப்பெட்டி பண்டல்களை வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த கனரக வாகனங்கள் விதிமுறைகளை மீறி, அதிக லோடுகளை ஏற்றி சாத்தூர் நகருக்குள் செல்கின்றன. இதனால், சாலையின் குறுக்காக செல்லும் மின்கம்பிகளில் உரசி, மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இந்த வாகனங்கள் வேகமாகச் செல்வதால், டூவீலரில் செல்வோர், பாதசாரிகள் விபத்து அச்சத்தில் செல்கின்றனர். எனவே, சாத்தூரில் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்களை முறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுப்பதுடன், நகருக்குள் பகல் நேரங்களில் செல்ல அனுமதிக்கக் கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திருவில்லிபுத்தூரில் 73 மையங்களில் கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது
விருதுநகரில் தேர்தல் விதிமீறல் அகற்றப்படாத அரசு விளம்பரங்கள் : தேர்தல் ஆணையம் கவனிக்குமா?
தொடரும் விபத்துகள் உயிரிழப்பு அதிகரிப்பு குத்தகைக்கு விடும் பட்டாசு ஆலை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
சாலை பள்ளங்களில் கொட்டப்படும் சாக்கடை கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ராஜபாளையம் கல்லூரியில் மனநல ஆலோசனை மையம் துவக்கம்
அகில இந்திய கராத்தே போட்டி திருவில்லிபுத்தூர் மாணவர்கள் வெற்றி
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்